திருவள்ளூர், பிப் 21- தாராட்சி கிராம சபை கூட்டத்தில் இளைஞர்களை கேள்வி கேட்க விடாமல், முறைகேடாக கிராம சபை கூட்டத்தை நடத்திய எல்லாபுரம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று (பிப் 20), எல்லாபுரம் பிடிஒ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தாராட்சி கிளை செயலாளர் எம்.திருப்பதி தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், ஊத்துக்கோட்டை வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.ரவி (ஒன்றிய கவுன்சிலர்), என்.கங்காதரன், த.கன்னியப்பன் ஏ.பத்மா ஆகியோர் பேசினர்.