சென்னை, ஜூன் 30 -
பெருநகர சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் வெள்ளியன்று (ஜூன் 30) மேயர் ஆர்.பிரியா தலை மையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அரசியல் சட்டத்தை மீறி செயல்படும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்தை வழி மொழிவதாகவும். இதனை மன்றம் நிறைவேற்றி தர வேண்டும் என்று மதிமுக உறுப்பினர் ப.சுப்பிரமணி கோரினார். இதை உறுப்பி னர்கள் மேசையை தட்டி ஆதரித்தனர். தீர்மானத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மன்றக்குழு தலைவர் ஆர்.ஜெயராமன், விசிக உறுப்பினர் அம்பேத் வளவன் (எ) குமாரசாமி ஆகியோர் பேசினர். இருப்பினும் தீர்மானத்தை மேயர் ஏற்கவில்லை.