districts

img

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கோரி...

தஞ்சாவூர் மல்லிப்பட்டினம் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றிய தமிழ் ஆசிரியர் செல்வி ரமணி பள்ளியிலேயே படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றக் கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.சீனுவாசன் தலைமையில் நடைபெற்றது. நிர்வாகிகள் கருணாநிதி, கார்த்திகேயன், சுரேஷ், வேம்புலி அம்மாள், சங்கர், இளமாறன், இரா ஞானசேகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.