திருவண்ணாமலை, ஜன.30- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ளது வாசுதேவன் பட்டி கிராமம். இங்கு 15-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பம் வசித்து வருகின்றது. தமிழ்நாடு அரசால் இலவச வீடு வழங்கப்பட்டும் மின் இணைப்பு இதுவரையில் வழங்கப்பட வில்லை. தெரு மின்விளக்கு கிடையாது. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செங்கம் வட்டார குழு செயலாளர் பி.கணபதி தலைமையில், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவ லகத்திற்கு சென்ற பழங்குடியின மக்கள், செயற்பொறியாளரை சந்தித்தனர். அப்போது, நாங்கள் வசிக்கும் பகுதிக்கு இணைப்பு வழங்க வேண்டும், தெரு மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. லட்சுமணன், மாவட்டக் குழு உறுப்பினர் சி.எம்.பிரகாஷ், இடை குழு உறுப்பினர்கள் எம். கண்ணன், எஸ். சதீஷ், சி. ஏழுமலை மற்றும் வாலிபர் சங்க தலைவர்கள் உடனிருந்தனர்.