districts

சென்னை முக்கிய செய்திகள்

மெட்ரோ பணிகள்: மூடப்பட்ட  கடைகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

சென்னை, மே 7- மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவ தால் மூடப்பட்ட கடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவது தொடர்பாக மெட்ரோ நிறுவன அதிகாரிகள் மற்றும் ரமணா நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி களுக்கிடையே கருத்து கேட்பு கூட்டம் பெரம்பூரில் நடைபெற்றது. இதில் மெட்ரோ நிறுவன அதிகாரிகள் குமரேசன், யோகானந்தம், விவேக், ரமணா நகர் குடி யிருப்போர் நலச்சங்க தலைவர் பாலச்சந்தர் மற்றும் குடியிருப்பு வாசிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ரமணா நகரில் மெட்ரோ ரயில் நிலையம் அமைத்து அதற்கு பெரம்பூர் மார்க்கெட் என பெயர் வைத்துள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அந்த ரயில் நிறுத்தத்திற்கு ரமணா நகர் என பெயர் வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரு வதால் ரமணா நகரில் உள்ள பொது மக்களின் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாமல் இருப்பது குறித்தும், குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும், மூடப்பட்டிருக்கும் 50 கடை களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.  மேலும் மெட்ரோ ரயில் பணிகள் முடிய ஐந்து ஆண்டுகள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டிருப்பதால் அது வரை இது போன்ற சிரமங்களை தங்க ளால் தாங்கிக்கொள்ள முடியாது என்றும், எனவே தங்களுக்கு மாற்று ஏற்பாடு கள் செய்து தர வேண்டும் என்றும் வலி யுறுத்தினர்.

கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து  பட்டாக்களை மீட்டுத்தரவேண்டும் சாராட்சியரிடம் இருளர் இன மக்கள் முறையீடு

கிருஷ்ணகிரி,மே.7 -  சூளகிரி வட்டம், காமன்தொட்டி ஊராட்சி  தட்சண திருப்பதி மலையை சுற்றிலும் 25 க்கும்    மேற்பட்ட மலைவாழ் இருளர் மக்கள் குடும்பத்தினர் நீண்ட காலமாக வசித்து வந்தனர்.  2012 ஆம் ஆண்டில் இருளர் குடும்பங் களை வேறு பகுதிக்கு மறு குடியமர்த்த ஆய்வு செய்யப்பட்டது.  2013 ல் கோவில் அறங்காவலர்கள், இருளர் மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இனங்க மாவட்ட நிர்வாகம் கோவில் குன்றுக்கு கீழ் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருந்த சிறு பாறை குன்றை உடைத்து சமன் படுத்தி 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. 16 பேருக்கு அப்போதே பட்டாக்கள் வழங்கப்பட்டது.  மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியில் தட்சண திருப்பதி நகரில் இருளர்களுக்காக 25 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு 2014 மார்ச் 3 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தலைமையில்  திறந்து வைக்கப்பட்டு  அவர்களிடம் வீடுகள் ஒப்படைக்கப்பட்டது.அங்கன்வாடி மையம், மேல்நிலை நீர் தேக்க தொட்டியும் கட்டப்பட்டது. இந்நிலையில் 2014 டிசம்பர் மாதம்  பட்டாக்களை அரசின் கணக்கில் பதி வேற்றம் செய்ய வேண்டும் எனக் கூறி மாவட்ட நிர்வாகம் கொடுத்த பட்டாக்களை இருளர் மக்களிடமிருந்து  காமன் தொட்டி கிராம நிர்வாக அலுவலர் வாங்கிச் சென்றார்.  பின்னர் பட்டாக்களை திருப்பி கேட்ட போது அதை கிராம நிர்வாக அலுவலர் திருப்பி தரவில்லை. அரசின் கணக்கிலும் பதிவேற்றம் செய்யவில்லை. இருளர் மக்களிடம்  பட்டா நகல்கள் மட்டுமே உள்ளன. கிராம நிர்வாக அலுவலர் வாங்கிச் சென்ற 16 அசல் பட்டாக்களையும் திரும்ப வழங்கக்கோரியும் மீதம் 10 வீடுகளுக்கான பட்டாக்களையும் வழங்கக்கோரியும் விவசாயிகள் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சூளகிரி  வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பலமுறை  காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சில நாட்களில் பட்டாக்கள் வழங்குகிறோம் என இருமுறை வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் கடிதம் கொடுத்தனர். ஆனால் இதுவரை பட்டாக்கள் கொடுக்கவே  இல்லை.  மாவட்ட ஆட்சியர் தலையிட்டு கிராம நிர்வாக அலுவலர் வாங்கிச் சென்ற 16 பட்டாக்களையும் உடனடியாக மீட்டு தர  வேண்டும்,  மீதமுள்ள 10 பேருக்கு பட்டாக  வழங்கவேண்டும் என சாராட்சியர் உதவி யாளரிடம் தட்சண திருப்பதி நகர் இருளர் மக்கள் மனு அளித்து  கோரிக்கை விடுத்துள்ளனர்.  மக்களவை பொதுத் தேர்தல் காலம் முடிந்த பிறகு இது குறித்து உடன் நடவடிக்கை எடுப்பதாக சாராட்சியரின் உதவியாளர் உறுதியளித்துள்ளார்.

கனடாவில் உயர்கல்வி கற்கும்  இந்திய மாணவர்களுக்கு உதவி

சென்னை,மே 7- கனடாவில் உயர்கல்வி திட்டங்களில் சேர விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு அவர்களது பயணத்தில் ஆதரவளிக்க ஒரு புதிய ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதை டிடி (TD )வங்கியும் மற்றும் அப்ளைபோர்டு செயல்தளமும் அறிவித்துள்ளன. கனடாவில் கல்வி பயில மாணவர்களுக்கு தேவைப்படும் ஆதாரவளங்கள் வழங்குவதே இந்த ஒத்துழைப்பு நடவடிக்கையின் நோக்கமாகும்.  ஒரு எளிய, டிஜிட்டல் செயல்முறை வழியாக விண்ணப்ப கட்டணம் ஏதுமின்றி டிடி வங்கியுடன் ஒரு ஜிஐசி  - ஐ (GIC)  இந்திய மாணவர்கள் தொடங்க முடியும்.  கனடாவில் அவர்கள் வந்து சேர்வதற்கு முன்னதாகவே ஜிஐசி தொகைக்கான வட்டியை அவர்கள் ஈட்டத் தொடங்குவார்கள்.  டிடி இன்டர்நேஷனல் ஸ்டூடண்ட் ஜிஐசி செயல்திட்டமானது, டிடி ( ஸ்டூடண்ட் செக்கிங் அக்கவுண்ட் என்பதையும் மாணவர்களுக்கு வழங்குகிறது.  இதற்கு மாதாந்திர கட்டணம் எதுவுமில்லை (நிபந்தனைகள் பொருந்தும்).  வரம்பற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், கூடுதல் சலுகைகளைப் பெறவும் முடியும்.

எண்ணூரில் மூதாட்டி படுகொலை:  பைக்கில் தப்பிய கும்பலுக்கு வலை

சென்னை, மே 7- எண்ணூரில் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மூதாட்டியை வெட்டிக் கொலை செய்துவிட்டு பைக்கில் தப்பிய கும்பலை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர். எண்ணூர் சத்தியவாணி முத்து நகர் 2ஆவது தெருவை சேர்ந்தவர் பாக்கியம் (65). இவர் திங்கட்கிழமை இரவு வீட்டு வாசலில் தனியாக அமர்ந்திருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 3 பேர், மூதாட்டியை சுற்றிவளைத்து கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பாக்கியத்தை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எண்ணூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாக்கியத்தின் பேரன் மகி (22). இவர் மற்றும் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், விக்னேஷ் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எண்ணூர் அண்ணா நகரை சேர்ந்த ஜீவானந்தம் (25) என்பவருக்கும் மேற்கண்ட மூவருக்கும் இடையே ஒரு பெண்ணை காதலிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை முற்றிய நிலையில், 3 பேரும் சேர்ந்து கடந்த மாதம் ஜீவானந்தத்தை வெட்டி காயப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் 3 பேரும் சிறை சென்றுவிட்டு கடந்த வாரம் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். இந்நிலையில் தன்னை வெட்டியவர்களை பழிதீர்க்க வேண்டும் என்று ஜீவானந்தம் முடிவு செய்து தனது நண்பர்கள் 2 பேருடன் எண்ணூர் பகுதியில் பைக்கில் சுற்றியுள்ளார். அப்போது தன்னை தாக்கிய 3 பேரும் சிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜீவானந்தம் மற்றும் அவரது நண்பர்கள் பைக்கில் சத்தியவாணி முத்து நகருக்கு வந்து அங்கிருந்த மகியின் பாட்டி பாக்கியத்திடம் விசாரித்துள்ளனர். அப்போது தனது பேரன் எங்கிருக்கிறான் என்று எனக்கு தெரியாது என கூறியதால், கோபத்தில் பாக்கியத்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தனிப்படை அமைத்து ஜீவானந்தம் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

உரிமைகோரிய தூய்மைப்பணியாளர் தற்காலிகமாக  பணி நீக்கம்  சிஐடியு தலையீட்டால் பின்வாங்கிய ஊராட்சி நிர்வாகம்

 திருவள்ளூர், மே 7- திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி  உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் (சிஐடியு), தலையீட்டால் தூய்மைக் காவலர் நாகதேவியை மீண்டும் பணியமர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்,  பழவேற்காடு  ஊராட்சியில்  தூய்மைப்பணியாளராக பணியாற்றி வருபவர் நாகதேவி (வயது 32). இவர் கடந்த 8 ஆண்டுகளாக  தள்ளுவண்டியில் வீடு,  வீடாக  சென்று குப்பைகளை சேகரிக்கும்  பணியில் ஈடுபட்டுவருகிறார். தொகுப்பூதி யம் பெறும் இவரை மூன்று நாட்களுக்கு முன்பு தெருவில் ஓடும் சாக்கடை கழிவுகளை வெறும் கையால் அகற்ற நிர்பந்தித்துள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவரிடம்  நாகதேவி ஏன் சாக்கடையை அள்ள வைத்தீர்கள் என கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாக நாக தேவியை தற்காலிக பணி நீக்கம் செய்து விட்டார். சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்த பழவேற்காடு ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் செயலை சிஐடியு  கண்டித்தது. திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஏ.ஜி.சந்தானம் மீஞ்சூர் பிடிஒ கவனத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு சென்றார். இதையடுத்து அவர் நாகதேவி வெள்ளியன்று (மே 10), முதல் மீண்டும்  பணியமர்த்தப்படுவார் என உறுதியளித்தார். பழவேற்காடு ஊராட்சியில் பணி யாற்றும் ஊழியர்களுக்கு கையுறைகள், சீருடை வழங்க வேண்டும், மருத்துவ பரிசோ தனை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையையும் ஊராட்சி நிர்வாகம் நிறைவேற்றவேண்டும் என்று  சிஐடியு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மாநகர  பேருந்தில் மாணவர்களின் ஆபத்தான பயணம்

சென்னை,மே 7- சென்னை சென்ட்ரல் நிலையம் அருகே திருவிக நகர்-விவேகானந்தர் இல்லம் நோக்கி சென்ற 38சி மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் பேருந்தின் மேற்கூரையில் இருந்து இறங்க கண்ணாடியை தட்டி, பேருந்தை நிறுத்தினர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்யூஓஓ ஸ்மார்ட் போன்களுக்கு அமேசானில் சிறப்பு தள்ளுபடி

சென்னை,மே7- சிறந்த செயல்திறன்மிக்க ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் ஐக்யூஓஓ நிறு வனம் தனது பிரபல ஸ்மார்ட்போன்களான ஐக்யூஓஓ 11, ஐக்யூஓஓ நியோ 9 புரோ, ஐக்யூஓஓ இசட் 9 மற்றும் ஐக்யூஓஓ இசட்7 புரோ ஆகியவற்றுக்கு சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது.  இந்த ஸ்மார் போன்க ளுக்கு அமேசான் இணைய தளத்தில் மே 2 முதல் மே 7 வரை நடைபெற உள்ள அமேசான் கோடை கால விற்பனையில் ரூ.23 ஆயிரம் வரை சேமிப்பை ஐக்யூஓஓ நிறு வனம் வழங்குகிறது. இந்த விற்பனை திட்டத்தில் ஐக்யூ ஓஓ இசட் 9 ஸ்மார்ட் போனை வாங்கும் வாடிக்கை யாளர்களுக்கு ரூ.599 மதிப்புள்ள இலவச விவோ இயர்போன்களுடன் ரூ. 2 ஆயிரம் உடனடி வங்கி தள்ளுபடி மற்றும் ரூ.1,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.