districts

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: சினிமா நடிகர் உட்பட 4 பேர் கைது

பண்ருட்டி, ஜூலை 25- பண்ருட்டி அருகே காவல் உதவி ஆய்வாளருக்கு  கொலை மிரட்டல் விடுத்த சினிமா நடிகர் உட்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எஸ்.ஏரிப்பாளையம் கிரா மத்தைச் சேர்ந்தவர் நடிகர் சிவமணி (38). இவர் திட்ட மிட்டப்படி என்ற படத்தை தயாரித்து, அவரே நடித்துள்  ளார். சிவமணி மீது கொலை,  மணல் திருட்டு உள்ளிட்ட பல்  வேறு வழக்குகள் புதுப்  பேட்டை காவல் நிலை யத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்  பாக சிவமணியிடம் விசா ரிப்பதற்காக புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் நந்த குமார், உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவல் துறையினர் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடித்தியுள்ளனர். அப்போது உதவி ஆய்வாளர் கிருஷ்ண மூர்த்தியை சிவமணி மற்றும் அவருடன் இருந்தவர்கள் ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை காவல்  துறையினர் வழக்குப் பதிவு  செய்து நடிகர் சிவமணி மற்றும் அவருக்கு உடந்தை யாக இருந்த பெரிய எலந் தம்பட்டையை சேர்ந்த திரு நாவுக்கரசு (49), கரும்பூரை சேர்ந்த ஸ்ரீதரன் (37), வீரப்  பெருமாநல்லூரை சேர்ந்த  பாக்கியராஜ் (39) ஆகி யோரை கைது செய்துள்ள னர்.

;