districts

உயிரோடு எரிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளும் சாவு

 ஆழ்வார்குறிச்சி அருகே சோகம்

தென்காசி ,மே 12- ஆழ்வார்குறிச்சி அருகே குடும்பத் தகராறில் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்ட இரட்டை குழந்தை களும் பரிதாபமாக உயிரிழந்தன. தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பரும்பு வேம்படி காலனி  தெருவை சேர்ந்தவர் கண்ணன், கூலித்தொழி லாளி. அவருடைய மனைவி பார்வதி (வயது 40). இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 ஆண்டுகள் ஆகிறது. 3½ வயதில் கலைமதி, அன்னலட்சுமி என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் பார்வதி திங்கட்கிழமை மதியம் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது அண்ணன் மகளை பார்த்து வருவதாக கண்ணனிடம் கூறினார். அதற்கு அவர், தற்போது உள்ள சூழ்நிலையில் அங்கு செல்ல வேண்டாம் என்றும், நமக்கு குழந்தைகள் உள்ளதால் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் எனவும் கூறி உள்ளார்.  இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே கண்ணன் வீட்டின் பின்புறம் கை, கால்களை கழுவச்சென்றார். இதற்கிடையே, பார்வதி தன் மீதும், தனது இரட்டை குழந்தைகள் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.அவர்களின் சத்தம் கேட்டு கண்ணன் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். ஆனால், பார்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிரோடு எரிக்கப்பட்ட இரட்டை குழந்தை களும் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடின.  

இதுகுறித்து தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இரட்டை குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். பின்னர் அங்கு இருந்து மேல்சிகிச்சைக் காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு குழந்தை களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து பார்வதியின் அண்ணன் நெல்லை டவுனை சேர்ந்த கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கிறார்.  மேலும், பார்வதிக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் இதுதொடர் பாக தென்காசி உதவி ஆட்சியர் ராமச்சந்தி ரனும் விசாரணை நடத்தி வருகிறார். ஆழ்வார் குறிச்சி அருகே குடும்ப தகராறில் தாய் தீக்குளித்து இறந்த நிலையில், அவரால் தீவைத்து உயிரோடு எரிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

;