districts

img

பணியின்போது போக்குவரத்து ஊழியர் மரணம்

திருவண்ணாமலை, மே 29- அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம்  (சிஐடியு) திருவண்ணா மலை, செய்யாறு பணி மனையில் தொழில்நுட்ப ஊழியரும், மண்டல துணைச் செயலாளருமான டி. தங்கராமன்  புதனன்று (மே 29) அதிகாலை பணியில்  இருந்த போது மாரடைப் பால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு அரசு  போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க மண்டல தலைவர் எ. சேகர், பொதுச்  செயலாளர் எஸ். முரளி, கே.தாமோதரன், துணைத் தலைவர்கள் கே.நாகராஜன் ராமதாஸ், வடிவேல்,மணி, ஏ.ஆர்.பாலாஜி, பிரகாஷ், ஏழு மலை, ஆர்பாரி (சிஐடியு), ஓய்வு பெற்றோர் நல அமைப்பு எஸ். பாலசுந்தரம் எஸ்.பாலதண்டாயுதம் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்கு புதனன்று (மே 29) மாலை செய்யறில் நடைபெற்றது.