districts

அப்பா குடிப்பதை நிறுத்தவும் கடிதம் எழுதிவிட்டு 16 வயது மகள் தற்கொலை

வேலூர், ஜூன் 4-

      வேலூரில் தந்தை தன் குடிப்பழக்கத்தை கைவிடவேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த  சின்ன ராஜாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. கூலித்தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவரது மகள் விஷ்ணுபிரியா (16). இவர் குடி யாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள அரசு  நிதியுதவி பெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு  படித்து, பொதுத்தேர்வில் 410 மதிப்பெண் கள் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் அடிக்கடி மது அருந்தி விட்டு வரும் தந்தையால் குடும்பத்தில் பிரச்ச னை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரண மாக அவரது மகள் விஷ்ணுபிரியா மன  நிம்மதியின்றி இருந்து வந்ததாகக் கூறப்படு கிறது.

   இந்நிலையில் விஷ்ணுபிரியா சனிக் கிழமை மாலை கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    அந்த கடிதத்தில், “எனது  சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது  தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும். எனது குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறதோ அப்போதுதான் எனது ஆத்மா சாந்தி அடையும்” என உருக்க மாக எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம்  தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத் திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர்.

   மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையின் குடிப் பழக்கத்தை கைவிடக்கோரி மகள் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.