சென்னை, மே 16–
கர்நாடக மாநிலம் குல்பர்காவைச் சேர்ந்த 60 வயதான ரமேஷ் (பெயர் மாற்றப் பட்டுள்ளது), என்பவருக்கு கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்த காரணத்தால் அவரது இடது காலை வெட்டி எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் அவர் தனது வலது காலை வெட்டி எடுக்காமல் சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக சென்னையில் உள்ள புரோமெட் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த புரோமெட் மருத்துவமனை டாக்டர் அருண் கல்யாணசுந்தரம் கூறுகையில், இந்த நோயாளிக்கு பெரிபெரல் ஆஞ்சியோ பிளாஸ்டி செயல்முறை மூலம் ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்க சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தோம். இதய தமனி பாதிப்பு காரணமாக அவரது ரத்த ஓட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டு இருந்தது. மேலும் அவருக்கு இடுப்புப் பகுதியின் ரத்த நாளங்களில் அடைப்பு இருந்ததும் கண்டறியப்பட்டது. “பிரக் எலுட்டிங் பலூன்” என்னும் தொழில்நுட்பம் மூலம் இதயத் தமனியின் அடைப்பை நீக்கி ஸ்டென்ட் பொருத்தினோம். மூன்று மணி நேரம் கழித்து, அவரது அறுவை சிகிச்சை வெற்றிபெற்றது என்றார்.
நீரிழிவு நோய் என்பது அமைதியாக உயிரைக் கொல்லும் ஒருவித நோய் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், இது கண்கள், சிறுநீரகங்கள், இதயம் மற்றும் பாதங்களை பாதிக்கிறது, அத்துடன் இதயத் தமனிகளில் ரத்த ஓட்டத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீரிழிவு நோயை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது, உடனடியாக சிகிச்சை எடுத்து முறையாக மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு அதைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.