districts

img

சுருள் வீச்சு போட்டி: பதக்கங்களை

காஞ்சிபுரம். பிப்.6 - தேசிய அளவிலான சுருள்வீச்சுப் போட்டியில் காஞ்சிபுரம் மாணவர் 2 வெள்ளிப் பதக்கம் வென்று 2-ஆம் இடத்தை பிடித்தார். குருவிமலை கிராமத் தைச் சேர்ந்த நெசவுத் தொழி லாளியான வி.சிவப்பிர காசம் மகன் சி.சுர்ஜித் (12), காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பியூஎம்எஸ் அரசு நடு நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் (பிப்.4) ஞாயிறன்று கோயம்புத்தூரில் தேசிய அளவிலான போட்டியில் சிலம்ப ஒற்றைக் கொம்பு சுற்றுதல்  சுருள்வீச்சுப் ஆகிய போட்டியில் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில்  2-ஆவது இடத்தைப் பிடித்தார். இவருக்கு வெள்ளிப் பதக்கமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.  மாணவர் இதற்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஒற்றைக்கம்பு சுற்றும் சிலம்பப் போட்டியில் முதல் பரிசும், திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற இரட்டைக்கம்பு சுற்றும் சிலம்பப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்ற வர். வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவரை அந்தப் பள்ளியின்  ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலரும் பாராட்டினர்.