சென்னை, மார்ச் 26- தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கொடுங்கையூர் பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மோடி அரசின் கடந்த 10 ஆண்டு கால மக்கள் விரோத ஆட்சியை விமர்சிக்கும் வகையில் ஐந்தரை அடி உயரத்தில் மாதிரி வடை செய்து வைத்துள்ளனர். மேலும் தமிழ்நாடு சமையல் கலை முன்னேற்ற தொழிலாளர் சங்கம் சார்பில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவிப்பதாகவும், கடந்த 10 ஆண்டு களில் உலக வங்கியில் இருந்த கருப்பு பணத்தை மீட்டு எடுப்போம், பெட்ரோல் விலையை குறைப்போம், வேலை வாய்ப்பை உருவாக்குவோம், ஜிஎஸ்டி உள்ளிட்ட திட்டங்கள் மூலம் பொது மக்களை மோடி அரசாங்கம் ஏமாற்றியதை விமர்சிக்கும் வகையில் மோடி சுட்ட வடை என்று ஐந்தரை அடி உயரத்துக்கு மாதிரி வடை செய்து வைத்துள்ளனர். வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்ட ணிக்கு தமிழ்நாடு சமையல் கலை தொழி லாளர் முன்னேற்ற சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது என்று சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இனியவன் தெரி வித்துள்ளார்.