districts

img

கடலூர் வெள்ளி கடற்கரை கோடை விழா இன்று நிறைவு

கடலூர்,ஜூலை 1-

     கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் அர சின் பல்துறை பணி விளக்க கண்காட்சி மற்றும் நெய்தல் கோடை விழா ஞாயிற்றுக் கிழமை நிறைவடைகிறது.

    வெள்ளிக்கிழமை (ஜூன் 30) இரவு மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் தலை மையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே.  பன்னீர்செல்வம், சுற்றுலாத் துறை கா.ராமசந்திரன் ஆகி யோர் இந்த விழாவை தொடங்கி வைத்த னர்.

     இந்த கோடை விழா வில் அரசு திட்டங்கள் மற்றும் பல்வேறு துறைக ளின் சார்பில் அமைக்கப் பட்டுள்ள 46 கண்காட்சி மற்றும் உணவு அரங்கு களையும் அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வை யிட்டனர்.

     மேலும், பள்ளி,கல்லூரி மாணவர்கள் அரசு இசைப் பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சி கள், பட்டிமன்றம், இன்னி சைக் கச்சேரியும் நடை பெற்றது.

   விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள், “வெள்ளிக் கடற்கரை பகுதியில் அடுத்த ஓராண்டுக்குள் தோட்டக்கலை துறையின் மூலம் நெய்தல் பூங்கா அமைக்கப்படும் என்றும் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களும் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

   இவ்விழாவில் விருத்தா சலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ராதா கிருஷ்ணன், கடலூர் மாநக ராட்சி மேயர்  சுந்தரி ராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.ராஜா ராம், மாவட்ட வருவாய் அலுவலர் ம.ராஜசேகரன், கூடுதல் ஆட்சியர்  மது பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.