கடலூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பு மனு தாக்கல் செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் அ.அருண் தம்புராஜிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.