நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் அனைவரும் 100 விழுக்காடு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த மணல் சிற்பங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் அ.அருண் தம்புராஜ் செவ்வாயன்று (மார்ச் 19) பார்வையிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் , மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.