districts

சென்னை முக்கிய செய்திகள்

சசிகாந்த் வெற்றிக்கு அயராது பாடுபட  சிபிஎம் ஊழியர்கள் கூட்டத்தில் முடிவு 

பொன்னேரி, மார்ச் 24- திருவள்ளூர் மக்களவை (தனி), தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து சிபிஎம் ஊழியர்கள் கூட்டம்  சனிக்கிழமையன்று (மார்ச் 23) பொன்னேரியில் நடை பெற்றது.  சசிகாந்த் செந்திலுக்கு கை சின்னத்திற்கும் வாக்கு களை சேகரிக்கும் விதமாக,   பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட   பொன்னேரி மற்றும் மீஞ்சூர்  பகுதிகளில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர்கள், பகுதி  குழு உறுப்பினர்கள், வெகு ஜன அமைப்புகளின் நிர்வாகி கள்  கலந்து கொண்டனர்.  கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் தங்கள் பொறுப்பு கிளைகளை கொண்டு பொன்னேரி நகராட்சி, மீஞ்சூர், ஆரணி  பேரூராட்சி ஆகிய இடங் களில் தீவிரமாக  வாக்கு களை சேகரித்து வெற்றியை உறுதி செய்வோம் என உற்சாகமாக தெரிவித்தனர். கூட்டத்திற்கு கட்சியின்  மாவட்டக் குழு உறுப்பினர்  பி.கதிர்வேல் தலைமை தாங்கினார். இதில் பொன் னேரி சட்ட மன்ற தொகுதி யின் பொறுப்பாளர் கே.விஜ யன் சிறப்புரையாற்றினார். இதில் பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர், மீஞ்சூர் பகுதி செயலாளர் இ.ஜெயவேல், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.அனிப், இ.தவமணி, டி.மதன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஜி.வினாயகமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியா கூட்டணிக்கு சோஷலிஸ்ட் கட்சி ஆதரவு

சென்னை, மார்ச் 24- சோஷலிஸ்ட் கட்சி இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து முழு வீச்சில் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் இன்று ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஜனநாயகப் பேரிழப்பை மீட்க வேண்டிய கட்டாயம்  ஒவ்வொரு இந்தியருக்கும் உள்ள உரிமையாகும். இதனை கட்டியம் கூறுவது  போல் அமைக்கப்பட்டுள் ளது தான் இந்தியா கூட்டணி.  தமிழகத்தில் திமுக தலை மையிலான  இந்த அணியை வெற்றி பெறச்செய்வோம் என அதன் தலைவர் தஞ்சை இளஞ்சிங்கம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

போக்குவரத்தை சீர் செய்த காவலர் மீது லாரி மோதி பலி

காஞ்சிபுரம், மார்ச் 24 - போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கும் போது பின்னால் வந்த  லாரி  மோதியதில் போக்குவரத்து காவலர் பலியானார். காஞ்சிபுரம் மடம் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன் (45). இவர்  திருப்பெரும்புதூரில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று திருப்பெரும்புதூர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருவள்ளூர் சாலை இணையும் கூட்டு  சாலையில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கும் போது பின்னால் கலவை இயந்திரத்தை இழுத்து வந்த 407 கூண்டு வண்டி மோதியதில் முன்னாள் சென்ற கண்டைனர் லாரி என இரு வண்டிகளுக்கிடையே சிக்கி உயிரிழந்தார்.