districts

img

சசிகாந்தை ஆதரித்து பொன்னேரியில் சிபிஎம் இருசக்கர வாகன பிரச்சாரம்

திருவள்ளூர், ஏப். 14- பாஜக-வின் பாசிச ஆட்சியை அகற்றி, சமத்துவ ஆட்சியை கொண்டு வர இந்தியா கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச்செய்யவேண்டுமென பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் கேட்டு கொண்டார். திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதி யில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசி காந்த் செந்திலை ஆதரித்து சிபிஎம் சார்பில் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளவம்பேடு கிராமத்திலிருந்து இரண்டு சக்கர வாகன பிரச்சாரம் துவங்கி யது. இந்த பிரச்சாரத்தை துரை. சந்திர சேகரன் எம்எல்ஏ துவக்கி வைத்து பேசி னார். இதற்கு கட்சியின் பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் தலைமை தாங்கி னார்.இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.விஜயன், மாவட்ட குழு உறுப்பி னர்கள் எஸ்.எம்.அனீப், இ.தவமணி, டி.மதன், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் இ.ஜெய வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அம்பேத்கர் பிறந்ததினத்தை முன்னிட்டு இளவம்பேட்டில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து பொது மக்க ளுக்கு இனிப்புகளை வழங்கி பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். இளவம்பேடு, சிறுவாக்கம், ஆரூர், இரு ளிப்பட்டு, பஞ்செட்டி, தச்சூர், ஆண்டார் குப்பம், மாதவரம், பொன்னேரி, தடப்பெரும் பாக்கம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது.