திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரத்தில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில், பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் ப. செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. லட்சுமணன், தாலுகா செயலாளர் பி.கணபதி, நகர செயலாளர், எம் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.