districts

img

அரசமைப்பு சட்டம் மாற்றப்படுகிறது; நீதித்துறை அணுகுமுறை மாறுகிறது

சென்னை, ஏப். 14 - இந்திய அரசமைப்புச் சட்டம் மாற்ற ப்படுகிறது; நீதித்துறையின் அணுகு முறை மாறி வருகிறது என்று சிபிஎம் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் தெரி வித்துள்ளார். சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளான ஞாயிறன்று (ஏப் 14) அண்ணாநகர் பகுதி, தா.பி.சத்தி ரத்தில் உள்ள அவரது  சிலைக்கு சிபிஎம் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். அப்போது பேசிய அவர், “முடி வெட்டுகிறவர் கூட தொட மறுக்கும் சமூ கத்திலிருந்து உருவானவர் அம்பேத் கர். உலகில் உள்ள அரசியலமைப்பு சட்டங்களை உள்வாங்கிக் கொண்டு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடி வமைத்தார். அரசியல் நிர்ணய சபை யில் இருந்தவர்களில் எண்ணிக்கை குறைந்த போதும், அனைத்தையும் திறம்படி ஒருங்கிணைத்து அரசமைப்பு சட்டத்தை உருவாக்கினார். அம்பேத்கரின் 125வது பிறந்த தினத்தையொட்டி நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசும்போது, ஒரு  தலித், அமைச்சராக இருந்தாலும் அந்த அமைச்சரவையில் அவர் தீண்ட தகாத வராகத்தான் உள்ளார் என்றேன். அதை  அவை குறிப்பில் இருந்து நீக்கினார்கள். இந்த உண்மையை ஏற்கவும், அதை சரி செய்யவும் பாஜக தயாராக இல்லை” என்றார். “இந்திய அரசியலமைப்பு சட்டத் தையும், தேசிய கொடியையும் பாஜக வும், ஆர்எஸ்எஸ்-சும் ஏற்கவில்லை. பிரதமர் மோடி மேடையில் பொய்யாக பேசிக் கொண்டே அரசியல் அமைப்புச் சட்டத்தை தகர்க்கும் வேலைகளை செய்கிறார். வேளாண் சட்டங்கள் உள்பட பல மாற்றப்பட்டுவிட்டது. அரச மைப்பு சட்டம் ஆபத்திற்குள்ளாகி உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்று வது என்றால் புது சட்டத்தை கொண்டு வருவதல்ல. மாறாக, தற்போதுள்ள அரசமைப்பு சட்டத்தில் உள்ள அம்சங் களை பகுதி பகுதியாக நீக்கிவிட்டு, புதி தாக சேர்க்கின்றனர்” என்றும் அவர் கூறி னார். “உழுபவனுக்கு நிலம் கொடு என்று  கேட்டால், உழுபவனின் நிலத்தை எடுத்து அம்பானி, அதானிகளுக்கு கொடுக்கிறார்கள். அம்பேத்கர் உரு வாக்கிய தொழிலாளர் சட்டங்களை அழித்து விட்டனர். பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளனர். நீதித்துறையின் அணுகுமுறைகள் மாறி வருகின்றன. ஆகவே, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் போராட் டத்தை தொடர்வோம்” என்றும் அவர் சூளுரைத்தார். கட்சியின் பகுதிச் செயலாளர் மகேந்திரவர்மன் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில், மத்திய சென்னை  மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உறுதி மொழியை வாசித்தார். மாநிலக் குழு உறுப்பினர் வே.ராஜசேகரன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி னார். இந்நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.திருவேட்டை, மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ் வி. வேணு கோபாலன், பி.சுந்தரம், கே.மணி கண்டன், அன்பழகன், பகுதிக்குழு உறுப்பினர்கள் பி.சீனிவாசன், தா.சுகு மார், முத்துராஜன், பெரியசாமி, குமர வேல், கிளைச் செயலாளர்கள் ஆபேல் பாபு, செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.