மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி, பல்வேறு வெகுஜன அமைப்புகள் சார்பில் திங்களன்று (ஜன.30) திறந்தவெளி கருத்தரங்கம் திருவொற்றியூர் பெரியார் நகரில் நடைபெற்றது. சிபிஎம் பகுதிச்செயலாளர் கதிர்வேல் தலைமை தாங்கினார். ‘ஆர்எஸ்எஸ் ஓர் அச்சுறுத்தல்’ எனும் தலைப்பில் வாலிபர் சங்க வடசென்னை மாவட்ட செயலாளர் எல்.பி.சரவணதமிழன் பேசினார். ‘ஆர்எஸ்எஸ்-சும் காந்தி படுகொவையும்’ என்ற தலைப்பில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பாக்கியலஷ்மி, ‘இறை நம்பிக்கையா? மதவெறியா?’ என்ற தலைப்பில் சிஐடியு மாவட்ட துணைதலைவர் ஜெயராமன், மாநிலக்குழு உறுப்பினர் சாமிநாதன் ‘காந்தியின் கனவு தேசம்’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார். பகுதி செயலாளர் கஸ்தூரி நன்றி கூறினார்.