கள்ளக்குறிச்சி, டிச.30 - மக்களின் அடிப்படை கோரிக்கை களை வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சிபிஎம் சார்பில் ஒன்றிய குழு உறுப்பி னர் எஸ்.சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல வருடங்களாக சாலை இல்லாத பாலிகிராமத்தில் தார் சாலை அமைத்து தர வேண்டும், பாலி கிராமத்தில் மிகவும் மோசமாக பாழ டைந்து கிடக்கும் ரேஷன் கடையினை பழுது நீக்கம் செய்து புதுப்பித்துக் கொடுக்கவேண்டும், குடும்ப அட்டை தாரர்கள் அனைவருக்கும் தரமான ரேஷன் அரிசி மற்றும் உணவுப் பொருள்களை வழங்க வேண்டும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பாலி கிராமம் வரை குண்டும் குழிமாக உள்ள தார் சாலையை சீரமைத்து பள்ளி மற்றும் கல்லூரி விவசாயிகள் கிராம மக்கள் பயன்படும் வகையில் சீரமைத்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 1964ஆம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறையால் வழங்கப்பட்ட வீட்டு மனையை கிராம நத்தம் கணக்கில் இணைக்காத மீதமுள்ள 30 நபர்களுக்கு கணினி பட்டா வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிபிஐஎம் மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம், எம்.கே.பழனி,மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.சீனிவாசன் ஒன்றிய செயலாளர் வேலா.பால கிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பி னர் வி.ரீட்டா, மற்றும் பி.தணிகா சலம், எம்.ஜோதிலிங்கம், வி.மார்த்தாண்டம், ஆர்.மலர், மஞ்சுநாதன், கே.சீனி வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் போராட்டக்காரர்களை அழைத்து பேசிய ஊராட்சி ஒன்றிய அலு வலர் அவர்கள் விரைவில் கோரிக்கை களை நிறைவேற்றித் தருவதாக கூறிய தன் அடிப்படையில் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.