காரல் மார்க்ஸ் குறித்து தவறாக பேசிய ஆளுநர் ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் எம்.பிரகலநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், பா. செல்வன், நிர்வாகிகள் எஸ்.குமரன், வழக்கறிஞர் அபிராமன் பலராமன், காமராஜ், கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காரல் மார்க்ஸ் குறித்து தவறாக பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் அவருக்கு “கம்யூனிஸ்ட் அறிக்கை” புத்தகம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், டி.ஏழுமலை, பி.சுப்பிரமணியன் மற்றும் எம்.கே.பூவரதன், வி.சாமிநாதன், இ.அலமேலு, எம்.கே.பழனி, மு.சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.