சிதம்பரம், ஜூன் 3-
சட்டத்தை மீறும் தீட்சிதர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குடும்பங்களில் தொடர்ந்து குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற திருமணங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப் பட்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்ட னர். ஆனாலும் குழந்தை திருமணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தீட்சிதர்களின் குழந்தை களுக்குத் திருமணங்கள் நடைபெறவில்லை எனத் தமிழ்நாடு ஆளுநர் குழந்தை திருமணத்தை ஆதரித்து கருத்து தெரிவித்து இந்திய அரசியல் சாசனத்தை கேள்விக்குறியாக்கி யுள்ளார். இது கண்டனத் திற்குரியது.
எனவே தமிழக அரசு தீட்சிதர்களின் குடும்பங் களில் குழந்தை திருமணங் கள் நடைபெறுவதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலைத்துறை ஏற்று நடத்த சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் ராஜா தலைமை தாங்கி னார். இதில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள், உதயகுமார், தேன்மொழி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் வாஞ்சி நாதன், பிரகாஷ், விஜய், செல்லையா, மனோகர், ஸ்டாலின், ஆழ்வார், ஜெய சித்ரா, நகர்குழு உறுப்பினர் சின்னையன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் மல்லிகா, நகர்மன்ற துணை தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.