கடலூர், டிச.23- கடலூர் மாவட்டத்தை இயற்கை பேரழிவு பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலி யுறுத்தி கடலூர் வட்டாட் சியர் அலுவலகம் முன்பு சிபிஎம் சார்பில் திங்களன்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமீபத்தில் பெய்த கன மழை மற்றும் பெஞ்சால் புயல் காரணமாக இம் மாவ ட்டம் பெரிதும் பாதிக்கப் பட்டது. இயற்கை சீற்றங்க ளில் இருந்து கடலூர் மாவட்ட மக்களை பாதுகாக்கவும், நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள வும், ஒன்றிய, மாநில அரசு கள் அதிக அளவில் நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் சேதமடைந்த சாலைகள், பாலங்கள் மற்றும் மின்கம்பங்களை சீர மைக்க வேண்டும்.கடலூர் நத்தப்பட்டு முதல் தாழங் குடா வரை தென்பெண்ணை ஆற்றின் இருபுற கரைகளை யும் உயர்த்தி, தரமான கான் கிரீட் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி கட லூர் வட்டாட்சியர் அலுவல கம் இந்தபோராட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமை தாங்கி னார். மூத்த தலைவர் எம்.மருதவாணன், எஸ்.தட்சணா மூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.ஆளவந் தார், எஸ்.கே.பக்கீரான், சிப்காட் செயலாளர் எம்.சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பண்ருட்டி பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், அரசூர் தடுப்பணையிலி ருந்து 18 ஏரிகளுக்கு வரக் கூடிய நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றி கால் வாய்களை சீரமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மறியல் போராட்டத்திற்கு வட்ட செயலாளர் எஸ்.கே. ஏழுமலை தலைமை தாங்கி னார். பண்ருட்டி நகர செய லாளர் எ.தேவராஜூலு, நெல்லிக்குப்பம் பகுதி செய லாளர் ஸ்டீபன் ராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட செயற்குழு உறு ப்பினர்கள் வி.உதயகுமார், வி.சுப்புராயன், எஸ்.திரு அரசு, மாவட்ட குழு உறுப்பி னர்கள் டி.கிருஷ்ணன், எம். ஜெயபாண்டியன், எஸ்.வினோத்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். திட்டக்குடி திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் வீ.அன் பழகன் தலைமை தாங்கி னார் . மாவட்ட குழு உறுப்பி னர் பி.முத்துலட்சுமி, நிர்வாகி கள் ஆர்.ராஜேந்திரன், ஆர். மகாலிங்கம், திட்டக்குடி நகர செயலாளர் டி.வரதன், பெண்ணாடம் நகர செய லாளர் பி.அரவிந்தன் உள்ளி ட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள். மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், ஜே.ராஜேஷ் கண்ணன் ஆகி யோர் கலந்து கொண்டு உரை யாற்றினர். இதில் ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம், மாவட்டக் குழு உறுப்பினர் கள் கண்ணன், வெங்கடே சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.