திருவள்ளூர், நவ 15- திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் சட்ட விதிகளை மீறி, இராசாம்மாள் தேவி பூங்காவில் கடைகள் அமைக்கும் பணிகளை உடனடி யாக நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. திருவள்ளூர் நகரம் தினந்தோறும் வளர்ச்சி பெற்று வரும் மாநகரமாக மாறி வருகிறது. மக்கள் ஆயிரக்கணக்கில் வியாபாரம் நிமித்த மாகவும், மருத்துவம், பள்ளி, கல்லூரி என பல வகைகள் வந்து செல்லும் பிரதான நகரமாய் திரு வள்ளூர் திகழ்கிறது. திருவள்ளூர் நகரில் நூறு ஆண்டு களுக்கு முன்பு நல்லெண்ணம் படைத்த கொடையாளர்கள் திரு வள்ளூர் நகரிலும், சுற்று வட்டாரத்தி லும் மக்கள் நலன் கருதி, தங்களது சொந்தமான பல ஏக்கர் நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு எழுதி வைத்துள்ளது, அனைவராலும் போற்றுதலுக்குரியதாகும். கௌடி என்பவர் பெயரில் அமைந்துள்ள, கௌடி உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி, தர்ம மூர்த்தி ராவ்பகதுர் காலாவாலா கண்ணன் செட்டியார் பெயரில், உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகள், மற்றும் வெங்கடாசலபதி நாயுடு தனது மனைவி பெயரில் நக ராட்சிக்கு தானமாக எழுதிக் கொடுத்த நேதாஜி சாலையில் (சென்னை சில்க் ஹவுஸ் எதிரில்), அமைந்துள்ள பூங்காக்கள், திருவள்ளூரில் அகரம் தெருவில் அமைந்துள்ள பூங்கா இவையெல்லாம் மக்களின் எதிர்கால நலன் கருதி காலம் காலமாக, நல்லெண்ண அடிப்படையில் செய்திட்ட தர்ம காரியங்களாகும். இதனை பாதுகாக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம், விதிகளைமீறி சட்ட விரோதமாக செயல்படுகிறது. திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட சி.வி.நாயுடு சாலையில் அமைந்துள்ள இராசாம்மாள் தேவி பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு என ஒதுக்கப்பட்ட இடமாகும். அந்த இடத்தில் கடைகளை கட்டுவது சட்ட விரோதமாகும். இது கண்டிக்கத் தக்கது. கட்டுமான பணிகளை உடனடி யாக நிறுத்த வேண்டும். மேற்படி பூங்காக்களில் குழந்தைகள் விளை யாடும் வகையில் முதியவர்கள், பெண்கள் காலை, மாலை நேரத்தில் நடைபயிற்சி போன்றவற்றிற்கு பயன்படுத்துகின்றனர். எனவே கடைகளின் கட்டுமான பணிகளை உயர்அதிகாரிகள் ஆய்வு செய்து தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி பூங்காவை சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். நவ 19 ல் சிபிஎம் ஆர்ப்பாட்டம் இராஜம்மாள் தேவி பூங்காவில் நகராட்சி நிர்வாகம் திடிரென சட்ட விரோதமாக கடைகளை கட்டும் பணி கள் மேற்கொண்டு வருவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும், நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் வரும் நவ 19 அன்று திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சிபிஎம் வட்ட செயலாளர் எஸ்.கலையரசன் அறிவித்துள்ளார்.