பயனாளி பங்களிப்பு தொகை இல்லாமல் வீடு வழங்கக் கோரி சில தினங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் சென்னை கண்ணப்பர் திடலில் மக்கள் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் பங்களிப்பு தொகை இல்லாமல் வீடு வழங்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில், கண்ணப்பர் திடல் மக்களை சனிக்கிழமையன்று (ஆக.24) கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் சந்தித்து பேசினார். மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, எழும்பூர் பகுதிச் செயலாளர் கே. முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.மிருதுளா, கே. மணிகண்டன் மற்றும் ஜெ.பார்த்திபன், என். மனோகரன், பி.கே. மூர்த்தி, எல். விக்னேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.