districts

img

தடுப்பணை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

சிதம்பரம்,  அக் 27- காட்டுமன்னார்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 -வது மாநாடு என்.சங்கரய்யா நினை வரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மூத்த உறுப்பி னர் பி.எஸ் மகாலிங்கம் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.  வட்டக் குழு உறுப்பினர்கள் தினேஷ்பாபு, விமல கண்ணன், கிளை செய லாளர் சுசிகலா ஆகியோர் தலைமை தாங்கினர். அஞ்சலி தீர்மானத்தை வட்டக் குழு உறுப்பினர் இளங்கோவன் வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஆறுமுகம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை வட்ட செய லாளர் பி.தேன்மொழி யும், வரவு செலவு அறிக்கையை வட்டக்குழு உறுப்பினர் புகழேந்தி சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ராமச் சந்திரன் மாவட்ட குழு  உறுப்பினர் எஸ். பிர காஷ் ஆகியோர் வாழ்த்திப்பேசி னர். மாவட்டச் செயலாளர் மாதவன் மாநாட்டை  நிறைவு செய்து பேசினார். காட்டுமன்னார்குடி வட்டக்குழு காட்டுமன்னார்  குடி,  திருமுட்டம்  என இரண்டாக பிரிக்கப்பட்டது. காட்டுமன்னார்குடி 13 பேர் கொண்ட வட்டக் குழுவிற்கு பி.தேன்மொழி வட்ட செயலாளராகவும், 9 பேர் கொண்ட திரு முட்டம் வட்ட குழுவிற்கு ஆர்.தினேஷ்பாபு வட்ட செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். காட்டுமன்னார்குடி வட்டம் ஆதனூர்,  மயிலாடு துறை மாவட்டம் குமார மங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை தடுப்பணை கட்டும் பணி களை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 2023-24ஆண்டுக்கான பயிர்  காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட பல  தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.