குன்றத்தூர், நவ.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட 24 வது மாநாடு குன்றத்தூர் வட்டம், படப்பையில் ஞாயிறன்று (நவ.17) செந்தொண்டர் பேரணியுடன் எழுச்சியுடன் தொடங்கியது. பொதுக்கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ரமேஷ் தலை மையில் நடைபெற்ற மாநாடு பொதுக்கூட்டத்தில் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், மாநில செயற்குழு உறுப்பி னர் எஸ்.கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஐ.ஆறு முக நயினார், இ.முத்துக் குமார், ஆர்.பத்ரி, காஞ்சி புரம் மாவட்ட செயலாளர் சி.சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வட்டக் குழு செயலாளர்கள் கே.பழனி ப.வடிவேலன் முன்னிலை வகிக்க, குன்றத் தூர் வட்டச் செயலாளர் கே.அண்ணாதுரை வர வேற்றார். முன்னதாக, செரப்பனஞ் சேரி கூட்டு ரோட்டில் இருந்து செந்தொண்டர் பேரணியு டன் தொடங்கி படப்பை, கீழ்படப்பை ஆகிய வழியாக பொதுக்கூட்ட திடலை வந்த டைந்தது. பின்னர் படப்பை பஜாரில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்ற னர். திங்களன்று(நவ.17) பிரதிநிதிகள் மாநாடு நடை பெறுகிறது. மாவட்டச் செய லாளர் சி.சங்கர் வேலை அறிக்கையை சமர்ப்பிக் கிறார். அதன் மீது விவாதம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, புதிய மாவட்டக் குழு, மாவட்டச் செயலாளர், மாநில மாநாட்டு பிரதி நிதிகள் தேர்வு செய்யப்படு கின்றனர். முன்னதாக, இடைக் கமிட்டி செயலாளர்கள் கொண்டு வரும் நினைவு ஜோதிகளை மூத்த உறுப்பினர்கள் ஏ.வாசுதேவன், ஒய்.சீத்தா ராமன் ஆகியோர் பெற்றுக் கொள்கிறார்கள்.