districts

img

சிபிஎம் நடைபயணம் அறிவிப்பு எதிரொலி சாலையை சீரமைக்க உடன்பாடு

திருவண்ணாமலை, மே.11-

    திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், கீழ்ப்பட்டு கிராமம் முதல் கஸ்தம்பாடி வரை குண்டும், குழியுமாக உள்ள இணைப்பு சாலையை தார் சாலையாக அமைத்துக் கொடுக்க வேண்டும். இராயங்குப்பம் முதல் கீழ்ப்பட்டு வரை  உள்ள கிராம சாலையில் முள் புதர்களை அகற்றி சாலையை செப்பனிட வேண்டும்,

  கீழ்ப்பட்டு கிராம தலித் மக்கள் பயன் படுத்தும் சுடுகாட்டிற்கு செல்லும் சாலையை  செப்பனிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கீழ்பட்டிலிருந்து சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவல கம் வரை நடைபயணம் நடத்த திட்ட மிடப்பட்டது.

   இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போளூர் வட்டாட்சியர், சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, கோரிக்கை கள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதிளித்தனர். இதனையடுத்து நடை பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

  இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், ப.செல்வன், சிவாஜி, சீனு வாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.