வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து சிபிஎம் சார்பில் திருவொற்றியூர் எர்ணாவூர் தெருவீதி அம்மன் கோயில் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், நிர்வாகிகள் கே.வெங்கட்டையா, தனலட்சுமி, திமுக வட்டச் செயலாளர் பவுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.