மத்தியசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறனுக்கு வாக்கு கேட்டு, அண்ணாநகர் நகர் என்எஸ்கே நகரில் சிபிஎம் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் எம்.ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், பகுதிச் செயலாளர் கே.மகேந்திரவர்மன், மாவட்ட குழு உறுப்பினர் பா.சுந்தரம், பகுதி குழு உறுப்பினர்கள் பெ.சீனிவாசன், எம்.முத்துராஜன், டி.குமரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.