districts

img

வனவிலங்கு சரணலாயத்திற்காக வீடுகளை அகற்றக்கூடாது சிபிஎம் அஞ்செட்டி மாநாடு வலியுறுத்தல்

அஞ்செட்டி, நவ.1- மார்க்சிஸ்ட் கட்சியின் அஞ்செட்டி வட்ட 12வது மாநாடு குமாரவடிவேல், பழனியம்மா,செல்வம் தலைமையில் நடைபெற்றது. மூத்த தோழர் அம்மாசிகவுண்டர் கொடியேற்றினார். சதீஷ்குமார் அஞ்சலி வாசிக்க குமாரவடிவேல் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் துவக்க உரையாற்றினார்,வட்ட செயலாளர் பி.தேவராஜன் வேலை அறிக்கையையும் வரவு செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தார். செயற்குழு உறுப்பினர் இருதயராஜ் வாழ்த்தி பேசினார்.  வனவிலங்கு சரணாலயம் அமைப்பதாக கூறி அஞ்செட்டி வட்டத்தில் பல தலைமுறைகளாக வாழும் பட்டியலின, மக்களையும்,165 கிராமங்களையும் அப்புறப்படுத்த முயற்சிப்பதை கைவிட வேண்டும், அவர்களின் வீடுகளுக்கும்,விவசாய நிலங்களுக்கும் பட்டாக்கள் வழங்க வேண்டும், தொட்டல்லா ஆற்றில் அணையும், தேவையான இடங்களில் தடுப்பணைகளும் கட்ட வேண்டும், அரசு கலைக் கல்லூரி,மகளிர் விடுதி,  அமைத்திட வேண்டும்,அஞ்செட்டி ஊராட்சியை பேரூராட்சியாகவும், ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்ட மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தி,பத்திரப்பதிவு அலுவலகம் வட்ட நீதி மன்றம் அமைத்திட வேண்டும், பழுதாகி குடியிருக்க தகுதியற்ற பட்டியல் இன மக்களின் தொகுப்பு வீடுகளை சீரமைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. 13 பேர் கொண்ட வட்டக் குழுவிற்கு பி. தேவராஜன் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரகாஷ் நிறைவு உரையாற்றினார். மாதப்பன் நன்றி கூறினார்.