districts

img

திரு.வி.க.பூங்காவில் திரு.வி.க. சிலையை நிறுவுக

சென்னை, அக். 6 - செனாய்நகர் திரு.வி.க.பூங்கா வில் திரு.வி.கல்யாண சுந்தரனார் சிலையை நிறுவ வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. கட்சியின் அண்ணாநகர் பகுதி 11வது மாநாடு ஞாயிறன்று (அக்.6) அண்ணாநகரில் நடைபெற்றது. குஜ்ஜி தெரு நடுநிலைப் பள்ளி, காந்திநகர் மருத்துவமனையை நிலை உயர்த்த வேண்டும். எம்எம்டிஏ காலனியில் மழைவெள்ளம் தேங்குவதை தடுக்க சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், எம்எம்டிஏ காலனியில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைக்க வேண்டும், நீர்வழிக்கரையோர மக்களை வெளியேற்றுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு செங்கொடியை மூத்த உறுப்பினர் கோ.சத்தியன் ஏற்றினார். பகுதிக்குழு உறுப்பினர் பி.சீனி வாசன் தலைமை தாங்கினார். பகுதிக்குழு உறுப்பினர்கள் எம்.முத்துராஜன் வரவேற்க, த.சுகுமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கவுரையாற்றினார். வேலை அறிக்கையை பகுதிச் செயலாளர் கே.மகேந்திர வர்மனும், வரவு செலவு அறிக்கையை ஆ.பெரியசாமியும் சமர்ப்பித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இரா.முரளி, மாவட்டக்குழு உறுப்பினர் பி.சுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா நிறைவுரையாற்றினார். பகுதிக்குழு உறுப்பினர் தி.குமரவேல் நன்றி கூறினார். பகுதிக்குழு தேர்வு 9 பேர் கொண்ட பகுதிக்குழுவின் செயலாளராக கே.மகேந்திரவர்மன் தேர்வு செய்யப்பட்டார்.