districts

img

சிபிஎம் அகில இந்திய 24 வது மாநாடு செங்கல்பட்டு மாவட்டத்தில் வரவேற்புகுழு அமைப்பு

செங்கல்பட்டு, பிப். 8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு ஏப்.2 முதல் 6 வரை மதுரையில் நடைபெறவுள்ளது. இதைமுன்னிட்டு  செங்கல்பட்டு மாவட்டத்தில் வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். கலைச்செல்வி தலைமை யில் சனிக்கிழமையன்று (பிப்.8)  நடைபெற்றது.   கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் டி.கிருஷ்ணராஜ், இ. சங்கர் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, உள்ளிட்ட பலர் இதில் பேசினர். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நாய னார் கூட்டத்தினை நிறைவு செய்து அகில இந்திய மாநாட்டு பணிகள் குறித்து பேசினார்.   இந்த கூட்டத்தில் 105 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. சிறப்பு தலைவராக டி.கிருஷ்ண ராஜ், வரவேற்புக் குழு தலை வராக இ.சங்கர், செயலாள ராக ப.சு.பாரதிஅண்ணா, பொருளாளராக வி.அரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.