வேலூர், ஜன. 15- வேலூர் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாடு விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் அரசின் வழி காட்டு நெறிமுறைகளின்படி பங்கேற்பவர்கள் அனைவரும் 2 தவனை தடுப்பூசி செலுத்தி யிருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு விழாவிலும் 100 காளை, 150 வீரர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள் என தெரி விக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 120 கிராமங்களில் மாடு விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் பட்டியலும் வெளி யிடப்பட்டது. இதையடுத்து வேலூர் அருகே உள்ள மூஞ்சூர் பட்டு, அணைக்கட்டு அருகே உள்ள சிவநாதபுரம், கே.வி.குப்பம் பனமடங்கி, குடியாத்தம் குட்ல வாரிபல்லி ஆகிய கிராமங்களில் சனிக்கிழமை காளை விடும் விழா தொடங்கியது. கால்நடை மருத்துவர்கள் பரி சோதனை செய்த பின், வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஓடுபாதையில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதற்கிடையில் ஓடு பாதையில் நின்றிருந்த பலரையும் காளைகள் முட்டித்தள்ளின. காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். குடியாத்தம் அருகே வீரிசெட்டி பல்லி ஊராட்சி குட்லவாரி பல்லி கிராமத்தில் 107ஆம் ஆண்டு காளை விடும் விழா நடைபெற்றது. இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் வேத மூர், சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த காளைகள் கலந்து கொண்டன. இந்த காளைகளின் உரிமையாளர்கள் கொரோனா பரிசோதனை சான்று கொண்டு வந்து அதிகாரிகளிடம் காட்டிய பின்பு காளை விடும் திருவிழாவில் காளைகளுடன் அனு மதிக்கப்பட்டனர். காளை ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரி சோதனை செய்தனர். தொடர்ந்து போட்டிகளில் பங்குபெற்ற காளைகள் சீறிப் பாய்ந்து சென்றன. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் குட்லவாரிபல்லி ஊர் பொது மக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர். மாடு விடும் விழா புதிய கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் மாடு விடும் விழாக்களை கண்காணித்தனர். மாடு விடும் விழா நடந்த கிராமங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தது.