districts

    கள்ளக்குறிச்சி வியாபாரிகள் மறியல் கடையடைப்பு

கள்ளக்குறிச்சி, ஜூன் 8-

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வ ராயன் மலையில் 171 மலைக் கிரா மங்கள் உள்ளது. இங்கு சுமார் 75 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரு கிறார்கள். இவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டுமானால் கச்சிராய பாளையம் அருகே உள்ள வெள்ளிமலைக்கு தான் வர வேண்டும்.  

   மலை கிராமங்களுக்கு முக்கிய நகர மாக வெள்ளி மலை திகழ்ந்து வருகிறது. இதனால் வெள்ளி மலைக்கு சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    வெள்ளிமலை பேருந்து நிலையத்தை சுற்றி 250 கடைகள் உள்ளது. இந்த பேருந்து நிலைய விரிவாக்கத்திற்காக அந்தப் பகுதியிலுள் கடைகளை அகற்றும் படி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு காலக்கெடுவும் விதித்திருந்தனர்.  

  இந்த நிலையில், வியாழனன்று (ஜூன் 8) கடைகளை அகற்ற அதிகாரிகள் வந்த னர். இதனால் ஆவேசமடைந்த வியா பாரிகள் மற்றும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.