districts

img

கண்ணப்பர் திடல் மக்களிடம் கட்டணம் வசூலிக்காமல், குடியிருப்புகள் ஒதுக்கீடு!

சென்னை, ஆக.23- பெருநகர சென்னை மாநகராட்சி, எழும்பூர் தொகுதியில்  58வது வட்டம், ரிப்பன் மாளிகை அருகாமையில் உள்ள  சைடாமஸ் சாலை ஓரத்தில் வசித்து  வந்த குடும்பங்களை 2002-ம் ஆண்டு பிப்ரவரியில் ஆசிய விளையாட்டு போட்டியை காரணம் கூறி, அன்றைக்கு  ஆட்சியில் இருந்த அதிமுக அரசு  வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. ஆட்சிக்கு வந்த திமுக அரசு, அப்பகுதி யில் உள்ள 114 குடும்பங்களுக்கு வீடுகளைஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு வீடுகளை  ஒதுக்கீடுசெய்யும் போது, கண்ணப்பர்  திடல் மக்களிடமிருந்து பயனாளி கட்டணம்தொகையை வசூலிக்காமல், மூலக்கொத்தளம் ராமதாஸ் நகரில் உள்ளதமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட  மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர்ஜெ.குமரகுருபரனிடம் 2024 ஆக. 23அன்று சிபிஎம் மத்திய சென்னைமாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மனு அளித் தார். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆணையர், கோரிக்கைகளின் நியாயத் தையும்,மக்களுக்கு உடனடியாக வீடு  கொடுக்க வேண்டியதன் அவசியத் தையும் ஏற்றுக் கொண்டார். பயனாளி தொகை கட்டணமில்லாமல் ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்கு நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதற்கு தமிழ்நாடு அரசிற்கும், பெரு நகர சென்னை மாநகராட்சி ஆணை யருக்கு சிபிஎம் சார்பில் நன்றி தெரி விக்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் எழும்பூர்  பகுதி செயலாளர் கே.முருகன், பகுதி குழு உறுப்பினர் ஜெ.பார்த்திபன், எம்.வி.கிருஷ்ணன், வழக்கறிஞர் மோகன், கண்ணப்பர்திடல் மக்கள் டி.செல்வம், சுமதி, சுகந்தி ஆகியோர் உடனிருந்தனர்.