districts

img

அங்கன்வாடி மையத்தை ஆக்கிரமிக்க முயற்சி: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை, செப். 4 - திருவேங்கடபுரம் அங்கன்வாடி மையத்தை ஆக்கிரமிக்க நடைபெறும் முயற்சிகளை பெருநகர சென்னை மாநகராட்சி தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, 109 ஆவது வட்டம், திருவேங்கட புரத்தில் கடந்த 50 ஆண்டு களுக்கும் மேலாக ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழந்தைகள் மையம் (அங்கன்வாடி) செயல் பட்டு வருகிறது. இந்த மையத்தில், அருகாமை யில் உள்ள ஏழை, எளிய  குடும்பத்தை சார்ந்த 30க்கும் மேற்பட்ட குழந்தை கள் பயின்று வந்தனர். இந்த மையத்தின் கட்டி டம் பழுதடைந்து உள்ள தால், அருகாமையில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள் மாற்றப்பட் டுள்ளனர். இதனை பயன் படுத்திக் கொண்டு சிலர், காலியாக உள்ள இடத்தை  ஆக்கிரமிப்பு செய்யும்  முயற்சியில் ஈடுபட்டுள்ள னர். எனவே, அங்கன்வாடி  மையத்தை ஆக்கிரமிப்பி லிருந்து பாதுகாக்க கோரி, மாநகராட்சி 9வது மண்டல அதிகாரியிடம் சிபிஎம் 109வது வட்டச் செயலாளர் எஸ்.ராஜ்குமார் மனு அளித்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட மண்டல அதிகாரி, குழந்தைகள் மையத்தை விரைந்து சீர மைத்து, மீண்டும் பயன் பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிகழ்வின் போது, பகுதிக்குழு உறுப்பினர் தி.சிவக்குமார், த.சுரேந் திரன் மற்றும் கே.சீனிவாசன், சேகர் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.