திருவள்ளூர், நவ.28- இளநிலை மற்றும் முதுநிலை, வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நவ 26 முதல் பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருக்கும் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை வாழ்த்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் க.திவ்யா, மாவட்ட செயலாளர் க.வெண்ணிலா உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர்.