districts

img

தொடரும் புயல் மழை வெள்ள அபாயம் -  சவால்களும் தீர்வு

‘தொடரும் புயல் மழை வெள்ள அபாயம் -  சவால்களும் தீர்வுகளும்’ எனும் தலைப்பில் வெள்ளியன்று (ஜன.5) சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமும், சென்னை சமூக பணி கல்லூரியின், சமூகப்பணி துறையும் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின. சூழலியல் குழுக்கள் ஒருங்கிணைப்பாளர் டி.தாமஸ் பிராங்கோ தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், நீரியல் நிபுணர் முனைவர் எஸ்.ஜனகராஜன், கடலோர நடவடிக்கை வலையமைப்பு  சார்பில் கே.சரவணன், எம்.எஸ்.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் பருவநிலை மாற்றம்  துறையின் முதுநிலை அறிஞர் முனைவர் த.ஜெயராமன், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும்  பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எஸ்.மோகன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி உள்ளிட்டோர் பேசினர்.