திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த்செந்தில் ஆதரித்து மாதவரம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பாடியநல்லூர் ஊராட்சியில் ஆலமரம் பகுதியில் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பி.நடேசன் தலைமையில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி .சந்தானம், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். சோழவரம் அருகிலுள்ள கே.கே.நகர், காந்தி நகரில் ஆட்டோ சங்கத்தின் (சிஐடியு), மாவட்ட செயலாளர் எம்.சந்திரன் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர்.