districts

img

தீபாவளி உதவித் தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்

புதுச்சேரி, அக்.17- புதுச்சேரி கட்டுமான நல வாரியத்தின் மூலம்  கட்டிட தொழிலாளர்களுக்கு, தீபாவளி பண்டிகை கால உதவித் தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு கட்டுமான தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நலவாரியத்தில் புதிய உறுப்பினராக விண்ணப் பித்த தொழிலாளர்களை அலைக்கழிக்காமல் விரைந்து ஆய்வு செய்து உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். கட்டிட தொழி லாளர் நலவாரிய உறுப்பி னர்களை நியமித்து பல ஆண்டுகளாக கூடாமல் இருக்கும் நலவாரிய கூட்டத்தை கூட்டி செயல் படுத்த வேண்டும். கட்டு மான தொழிலுக்கு அத்தியா வசிய பொருளான மணலுக் கான கொள்கை முடி வெடுத்து தடையின்றி மணல் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை   வலியுறுத்தி புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற் பேட்டை கட்டிட நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியு புதுச்சேரி கட்டு மான தொழிலாளர் சங்க த்தின் மாநிலத் தலைவர் கலியன் தலைமை தாங்கி னார். சங்க பொதுச் செய லாளர்  பிரபுராஜ், சிஐடியு மாநிலச் செயலாளர் சீனி வாசன், துணைத் தலைவர் கொளஞ்சியப்பன் கட்டிட தொழிலாளர் சங்க நிர்வாகி கள்  ஜீவானந்தம், அரிதாஸ், சுப்பிரமணியன், ஆனந்தன், சேகர், அமுதா ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி கொட்டும் மழையிலும் முழக்கமிட்டனர்.