districts

img

எதிர்கட்சிகளை முடக்க மோடி அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது

புதுச்சேரி,  மார்ச் 23- தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகளை முடக்கும் வேலையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது என்று முன்னாள்  முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டி யுள்ளார். மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டி யிடும் திமுக கூட்டணியின், காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேட்பாளர் வைத்தி லிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திமுக மாநில அமைப்பாளரும் எதிர்க்கட்சி தலை வருமான சிவா, அவை தலைவர் எஸ்.பி.சிவக்குமார், சிபிஐ மாநில செய லாளர் சலீம், சிபிஎம் மாநில செய லாளர் ராஜாங்கம்,மாநில செயற் குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச் சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் முதன்மை செயலாளர் தேவ. பொழிலன், மதிமுக மாநில செயலா ளர் கபிரியேல் மற்றும்  திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், காங்., எம்எல்ஏ வைத்திய நாதன், முன்னாள் அமைச்சர் கந்த சாமி, முன்னாள் அரசு கொறடா அனந்த ராமன்,கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தி யாளர்களிடம் கூறியதாவது-  பிரதமர் நரேந்திர மோடி மக்களவை தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சி பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வதை தடுத்து நிறுத்தும் வகையிலும், காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பல மாநிலங்களுக்கு செல்வதை முடக்கும் வகையிலும் வருமான வரித்துறையை வைத்து காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த வங்கி கணக்கை முடக்கி இருக்கிறது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்யாமல் இருந்தால் அவர்களுக்கு பின்னடைவு ஏற்படும் என்ற உள்நோக்கத்தோடு, மோடி அரசு திட்டமிட்டு, தன்னுடைய அதி காரத்தை தவறாக பயன்படுத்தி வரு மான வரித்துறை மூலம் வங்கி கணக்கு களை முடக்கி இருப்பதை இந்தியா கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது. எதிர்கட்சிகளின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்பதற்காக அரசு அதிகாரிகள் மூலம் தேர்தல் சமயத்தில் நடைமுறைப் படுத்து கிறார்கள். தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரவு நேரத்தில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தில்லி யில் இது சம்மந்தமாக கொந்த ளிப்பு ஏற்பட்டிருக்கிறது. தில்லி யில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2 ஆண்டுகாலம் நிலுவையில் இருக்கிறது. ஆனால் 2 ஆண்டுகாலமாக எந்தவித நட வடிக்கையும் எடுக்காமல் தடை போட்ட மோடி அரசு தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளை பழி வாங்க அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தியது. அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் சமயத்தில் தில்லி, பஞ்சாப் சென்று பிரச்சாரம் செய்தால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்பதால் அவரை கைது செய்திருக்கிறது. இது ஜனநாயகத்தை மிகப்பெரிய கேள்விக் குறியாக்கி இருக்கிறது. தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நடத்து வதற்கான உரிமையை வழங்க வேண்டும். அதனை முடக்கும் வேலையை மோடி அரசு செய்து வரு கிறது. ஆகவே மோடி அரசின் சதித் திட்டத்தை எதிர்த்து இந்தியா கூட்டணி முன்னேறுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.