அரசியலமைப்புச் சட்டத்தை சீர்குலைக்கும் புதிய மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சிபிஐ சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே பகுதிச் செயலாளர் ஆர்.விஜயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ்.கண்ணன், நிர்வாகிகள் பி.மாரியப்பன், நாச்சியப்பன், கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.