districts

img

வாலிபர் சங்க தலைவர்கள் கைதுக்கு கண்டனம்

தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சாதி வெறியர்களை கைது செய்ய வேண்டும், அவமான சின்னமாக உள்ள அந்த தண்ணீர் தொட்டியை இடிக்க வேண்டும் என அந்த கிராமத்தில் போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இதனை கண்டித்து சனிக்கிழமையன்று (ஜன.21) சைதாப்பேட்டையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


வேங்கை வயல் கிராமத்தில் சாதி வன்மத்தோடு குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த குற்றவாளிகளை கைது செய்யாமல், நியாயம் கேட்டு போராடும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.கலையரசன், டி.மதன்,  பல.லோகநாதன், விஜயகாந்த்,  முனிரத்தினம்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.