தோழர் சிங்காரவேலர் 78ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சிஐடியு வடசென்னை மாவட்டக்குழு சார்பில் ராயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் சு.லெனின் சுந்தர், பொருளாளர் வி.குப்புசாமி, நிர்வாகிகள் முத்துசாமி, டி.வெங்கட், பாப்பூ, செல்வானந்தம், செல்வம், அண்ணாமலை, கண்ணன், தமிம்சேட், ராஜேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், பகுதிச் செயலாளர் எஸ்.பவானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.