வேலூர், ஜன. 13- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேலூர்-திருப்பத்தூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், முழு நேர ஊழியருமான மறைந்த தோழர் ப.சக்திவேல் குடும்ப பாதுகாப்பு நிதி அளிப்பு இரண்டாவது தவணையாக சக்திவேல் தாயார் ஞான புஷ்பத்திடம் ரூ.25 ஆயிரம், குடும்ப செலவுகளுக்காக சக்திவேல் துணைவியார் மஞ்சுளாவிடம் ரூ.25000-மும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி. சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் பி.காத்தவராயன் கே.சாமிநாதன் மற்றும் பேரா.ரகு, சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, டிசம்பர் 17 அன்று அவரது சொந்த கிராமம் அகரம் சேரியில் மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி தலைமையில் நிதியளிப்பு கூட்டம் நடை பெற்றது. இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ரூ. 3 லட்ச குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கினர். அந்த நிதி வங்கி யில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டது.