சிதம்பரம், மார்ச். 5- தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் ஜி.பழநியின் துணைவியார் தெய்வகண்ணி (58) வெள்ளியன்று காலமானார். கீரப்பளையம் ஒன்றிய பகுதிகளில் அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தை வலுவான இயக்கமாக மாற்றியதில் தெய்வகண்ணி முக்கிய பங்காற்றியவர். சிதம்பரம் வட்டச்செயலாளராக திறம்பட பணியாற்றினார். தனது இறுதிக்காலம் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்து களப்பணியாற்றினார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தநிலையில் வெள்ளி யன்று (ஏப்.5) உயிரிழந்தார். தகவல் அறிந்த உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி ஆகி யோர் தொலைபேசியில் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த னர். இவரது உடலுக்கு சிபிஎம் கடலூர் மாவட்டச்செயலாளர் மாதவன், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், சுப்புராயன்,மருதவாணன், அசோகன், ராஜேஷ்கண்ணன், சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ், கடலூர் மாநகர செயலாளர் அமர்நாத், கீரப்பளையம் ஒன்றிய செயலாளர் செல்லையா, சிதம்பரம் திமுக மாநில செயற்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன், விசிக மாவட்ட செய லாளர் அரங்க. தமிழ்ஒளி, கடலூர் மாநக ராட்சி துணைமேயர் தாமரைச் செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். தோழர் தெய்வகண்ணியின் மகன் பி. வாஞ்சிநாதன் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராகவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். செங்கல்மேடு மயானத்தில் தோழர் தெய்கண்ணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.