திருவள்ளூர்,ஜன.19- மீஞ்சூர் ஒன்றியம் வல்லூர் கிராமத்தை சேர்ந்த மூத்த தோழர் சொக்கலிங்கம் ஞாயிறன்று காலமானார். அவருக்கு வயது 95. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி யாக இருந்த போது 1962 ல்கட்சி யில் இணைந்தார். பின்னர் விலை வாசி உயர்வை எதிர்த்து நடை பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு 45 நாட்கள் சிறைவாசத்தை அனுபவித்தவர். 1964 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானதிலிருந்து தொடர்ந்து கட்சியில் உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார். பல்வேறு போராட்டங் களில் தலைமையேற்று நடத்திய அவர் மக்களின் நலனுக் காக தொடர்ந்து போராடினார். தனது கடைசி மூச்சுவரை இயக்கத்தோடு இணைந்து களப்பணியாற்றினார். கட்சி யின் லெவியை முறையாக செலுத்துவது உள்ளிட்ட எல்லா இயக்க செயல்பாட்டிலும் முன்னணியில் நின்று களமாடி னார். அவரின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், ஒன்றிய செயலாளர் என்.ரமேஷ்குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெங்க டேசன், பாண்டியன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ஜி.விநாயக மூர்த்தி, பி.கதிர்வேல், உட்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தி னர். சொந்த ஊரான வல்லூரில் உள்ள மயானத்தில் தோழர் சொக்கலிங்கத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.