districts

பிறந்த குழந்தைக்கு மூளையில் சிக்கலான அறுவைசிகிச்சை

சென்னை, மார்ச் 24 பிறந்து ஒரு நாள் மட்டுமே நிறை வடைந்திருக்கும் பச்சிளங் குழந்தைக்கு மூளையில் சிக்கலான அறுவை சிசிச்சை மேற்கொள்ளப்பட்டு காப்பாற்றப் பட்டுள்ளது,  சென்னை சூளைமேட்டில் உள்ள  எம்ஜிஎம் மருத்துவமனையில்,  அனு மதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு  மூளையில் பெரிய ரத்த உறைவுக் கட்டி இருந்தது. அதை நீக்க அறுவைசிகிச்சை அவசியமாக இருந்தது என்று மருத்துவமனையின் குழந்தைகள் நலமருத்துவரும் கை - கால் வலிப்பு மற்றும் நகர்வு கோளாறுக்கான அறுவைசிகிச்சைமருத்துவருமான எல்.எஸ். ஹரிஷ்சந்திரா கூறினார். பச்சிளங்குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவின் தலைவர் மருத்துவர் பினு நினன்தலைமையிலான குழுவினரின் ஆதரவோடு இந்த அறுவைசிகிச்சையை  அவர் மேற்கொண்டார். ஒரு நாளுக்கு முன்பு பிறந்த பச்சிளங்குழந்தையின் மூளை யில் இருந்த ரத்த உறை கட்டியை அகற்று வதற்காக மிகவும் நுட்பமான இரு படி நிலைகள் கொண்டஅறுவைசிகிச்சை செயல்முறை உரிய நேரத்திற்குள் செய்யப்பட்டதன் மூலம்இக்குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டதாக ஒரு செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.  “உலகளவில் இத்தகைய சிக்கலான பிரச்சனையோடு பிறந்த பச்சிளங் குழந்தைகளின்எண்ணிக்கை ஏறக்குறைய 100 க்குள் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.